படம்:
பொறியாளன்
இயக்குனர்: தாணுகுமார்
ஒளிப்பதிவு; வேல்ராஜ்
மியூசிக்: ஜோன்ஸ்
ஹீரோ
இன்ஜினியரிங் பட்டதாரி. ஒரு கட்டுமான நிறுவனத்தில் உதவி இன்ஜினியராக பணியாற்றுகிறார். ஹீரோ ஹரீஸின் நண்பன்
அஜய்ராஜ். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் அக்சுதா குமாரிடன் அடியாளாக இருக்கிறார்.
அஜய்ராஜின் சித்தி பெண்தான் நாயகி ஆனந்தி. நண்பனை பார்க்க அடிக்கடி ஹீரோ அவர் வீட்டிற்குசெல்கிறார்.
இதனால் நாயகனுக்கும், நாயகிக்கு காதல் பற்றிக்கொள்கிறது.
இதற்கிடையில் நாயகன் வேலை பார்க்கும் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிலிருந்து விலகிவிடுகிறார். இனிமேல் யாரிடமும் வேலை பார்க்க கூடாது. சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஹீரோ, அவருடைய அப்பாவிடம் புதிய கட்டுமான கம்பெனி ஆரம்பிக்க பணம் கேட்க, அப்பாவும் கொடுத்து உதவுகிறார்.
இதற்கிடையே கட்டிட்டம் கட்ட நிலப் புரோக்கர் ஒருவர் அறிமுகமாகிறார். அவரிடம் தனது திட்டத்தைச் சொல்லி நிலத்தைப் பார்க்க சொல்கிறார். அது சிட்டியில் வெளியில் இருக்கிறது.
சிட்டிக்கு வெளியில் கட்டிடம் கட்டி விற்பதை விட சிட்டிக்குள்ளேயே கட்டிடம் கட்டினால் சீக்கிரம் விற்றுவிடலாம் என்று சொல்லி, அந்த புரோக்கர் ஒரு நிலைத்தை காட்டுகிறார்.
ஆனால் அதன் மதிப்பு 2 கோடி. அவ்வளவு பணம் ஹீரோவிடம் இல்லை.
இதற்கிடையில் நண்பன் அடியாளாக வேலை செய்யும் அக்சுதா குமாரை போலிசை கைது செய்கிறது. அப்போது அவரின் பணம் ஹீரோவின் நண்பன் கைவசம் இருக்கிறது.
அந்த பணத்தை ஹீரோவுக்கு கொடுத்து உதவ, அதை வாங்கி கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும்போதுதான், ஒருவன் நான்தான் இந்த நிலத்துக்கு சொந்தக்காரன் என்று குறுக்கிடுகிறான்.
பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹீரோ, ஏமாற்றிய நில புரோக்கரை தேடுகிறான்.
இதற்கிடையே வில்லன் ஜெயிலிருந்து வந்து, தன்னுடைய பணத்தை கேட்க பிரச்னை பெரிதாகிது. நிலபுரோக்கரை தேடி பிடித்து பணத்தை மீட்டாரா? என்பதை படத்தின் மீதி கதை.
தற்போது நடக்கும் ரியல் எஸ்டேட் பிசினசை நம்பி, பணத்தை கட்டி ஏமாறும் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக (படமாக) இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை. ஜி.வி. பிரகாஷ் குரலில், ஜோன்ஸ் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது.
பொறியாளன் படம் பொறி தட்டி நிற்கிறது. ஒரு முறை பார்க்கலாம்.